திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 846
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – புல்லறிவாண்மை
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
மு. வரதராசன் உரை : தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை : தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
கலைஞர் உரை : நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Pullarivaanmai ( Ignorance )
Tanglish :
Atram Maraiththalo Pullarivu Thamvayin
Kutram Maraiyaa Vazhi
Couplet :
Fools are they who their nakedness conceal,And yet their faults unveiled reveal
Translation :
Fools their nakedness conceal And yet their glaring faults reveal
Explanation :
Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them)
Leave a Reply