திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1167
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – படர்மெலிந் திரங்கல்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
மு. வரதராசன் உரை : காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை : காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.
கலைஞர் உரை : நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Patarmelindhirangal ( Complainings )
Tanglish :
Kaamak Katumpunal Neendhik Karaikaanen
Yaamaththum Yaane Ulen
Couplet :
I swim the cruel tide of love, and can no shore descry,In watches of the night, too, ‘mid the waters, only I
Translation :
Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush
Explanation :
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live