திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1214
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – கனவுநிலை உரைத்தல்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
மு. வரதராசன் உரை : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா உரை : நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
கலைஞர் உரை : நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kanavunilaiyuraiththal ( The Visions of the Night )
Tanglish :
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku
Couplet :
Some pleasure I enjoy when him who loves not meIn waking hours, the vision searches out and makes me see
Translation :
In dreams I enjoy his love-bliss Who in wakeful hours I miss
Explanation :
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness