திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1088
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – தகை அணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
மு. வரதராசன் உரை : போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
சாலமன் பாப்பையா உரை : களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.
கலைஞர் உரை : களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Thakaiyananguruththal ( The Pre-marital love )
Tanglish :
Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul
Nannaarum Utkumen Peetu
Couplet :
Ah woe is me my might, That awed my foemen in the fight,By lustre of that beaming brow Borne down, lies broken now
Translation :
Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet
Explanation :
On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless