திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1314
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – புலவி நுணுக்கம்
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
மு. வரதராசன் உரை : யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை : காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
கலைஞர் உரை : “யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pulavi Nunukkam ( Feigned Anger )
Tanglish :
Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal
Yaarinum Yaarinum Endru
Couplet :
‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;’What all, what all?’ she instant cried; And all her anger woke
Translation :
“I love you more than all” I said “Than whom, than whom?” she sulked and chid
Explanation :
When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky