சுவையான செட்டிநாடு மீன் மசாலா குழம்பு-Chettinadu Fish Masala – அனைவராலும் விரும்பப்படும் தமிழகத்தில் மிகவும் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்று செட்டிநாடு உணவு முறை.
அதற்கு இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் முக்கிய காரணமாகும். அந்த வகையில் சுவையான காரசாரமான செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
தேவையானவை:
- மீன் – 500 கிராம்,
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
- புளிக்கரைசல் – 3 டேபிள்ஸ்பூன்,
- நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
- அரைத்த தேங்காய் விழுது – 1/2 மூடி,
- பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்,
- மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
- தனியாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
- மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
- நறுக்கிய வெங்காயம் – 2,
- தக்காளி – 2,
- சின்ன வெங்காயம் – 10,
- பூண்டு பல் – 5,
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
- கடுகு – 1/4 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை,
- கொத்தமல்லித்தழை – சிறிது.
செய்முறை:
நன்கு சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகளுடன் மஞ்சள் தூள் உப்பு புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும்.
கடாயில் என்னை ஊற்றி சிறிது நேரத்தில் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின்பு அதை ஆறவைத்து அதனுடன் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு மட்பாண்டத்தில் நல்லெண்ணெயை ஊற்றி அதனுடன் கடுகு கறிவேப்பிலை பூண்டு வெந்தயம் பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்திருந்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தேவையான மசாலா பொடிகளையும் சேர்த்து வதக்கி புளிக்கரைசல் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் முதல் கொதி வந்தவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு பின்பு கொத்தமல்லி தலை சேர்த்து அலங்கரிக்கலாம்.
இப்பொழுது சுவையான செட்டிநாடு மீன் மசாலா குழம்பை -Chettinadu Fish Masala- பரிமாறலாம்.