உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். | குறள் எண் - 592

ullam-utaimai-utaimai-porulutaimai-nillaadhu-neengi-vitum-592

65

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

"ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது"

கலைஞர் உரை

"ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்."

மு. வரதராசன் உரை

"மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது. "

மணி குடவர் உரை

Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum

Couplet

The wealth of mind man owns a real worth imparts,Material wealth man owns endures not, utterly departs

Translation

Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed

Explanation

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not

65

Write Your Comment