திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 443
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
மு. வரதராசன் உரை : பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை : துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
கலைஞர் உரை : பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Periyaaraith Thunaikkotal ( Seeking the Aid of Great Men )
Tanglish :
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal
Couplet :
To cherish men of mighty soul, and make them all their own,Of kingly treasures rare, as rarest gift is known
Translation :
Honour and have the great your own Is rarest of the rare things known
Explanation :
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things