திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1007
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – நன்றியில் செல்வம்
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
மு. வரதராசன் உரை : பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை : ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.
கலைஞர் உரை : வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Nandriyilselvam ( Wealth without Benefaction )
Tanglish :
Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam
Petraal Thamiyalmooth Thatru
Couplet :
Like woman fair in lonelihood who aged grows,Is wealth of him on needy men who nought bestows
Translation :
Who loaths to help have-nots, his gold Is like a spinster-belle grown old
Explanation :
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband