திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1127
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – காதற் சிறப்புரைத்தல்
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
மு. வரதராசன் உரை : எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
சாலமன் பாப்பையா உரை : என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.
கலைஞர் உரை : காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Kaadharsirappuraiththal ( Declaration of Love”s special Excellence )
Tanglish :
Kannullaar Kaadha Lavaraakak Kannum
Ezhudhem Karappaakku Arindhu
Couplet :
My love doth ever in my eyes reside;I stain them not, fearing his form to hide
Translation :
My lover in my eyes abides I paint them not lest he hides
Explanation :
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself