திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 391
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
மு. வரதராசன் உரை : கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
கலைஞர் உரை : பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kalvi ( Learning )
Tanglish :
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka
Couplet :
So learn that you may full and faultless learning gain,Then in obedience meet to lessons learnt remain
Translation :
Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly
Explanation :
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning