திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 302
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – வெகுளாமை
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
மு. வரதராசன் உரை : பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை : பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
கலைஞர் உரை : வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Vekulaamai ( Restraining Anger )
Tanglish :
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira
Couplet :
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, ’tis greater, evil still
Translation :
Vain is wrath against men of force Against the meek it is still worse
Explanation :
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil