திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1233
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – உறுப்புநலன் அழிதல்
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
மு. வரதராசன் உரை : கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
சாலமன் பாப்பையா உரை : அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
கலைஞர் உரை : தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Uruppunalanazhidhal ( Wasting Away )
Tanglish :
Thanandhamai Saala Arivippa Polum
Manandhanaal Veengiya Thol
Couplet :
These withered arms, desertion’s pangs abundantly display,That swelled with joy on that glad nuptial day
Translation :
These arms that swelled on nuptial day Now shrunk proclaim “He is away”
Explanation :
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)