குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். | குறள் எண் - 965

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.
கலைஞர் உரை
"குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்"
மு. வரதராசன் உரை
"மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்."
சாலமன் பாப்பையா உரை
"நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும'¢ என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது. "
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva Kundri Anaiya Seyin
Couplet
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,Though like a hill their high estate, they sink to nought
Translation
Even hill-like men will sink to nought With abrus-grain-like small default
Explanation
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing
Write Your Comment