சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். | குறள் எண் - 962

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.
கலைஞர் உரை
"புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்"
மு. வரதராசன் உரை
"புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்."
சாலமன் பாப்பையா உரை
"புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார். "
Seerinum Seeralla Seyyaare Seerotu Peraanmai Ventu Pavar
Couplet
Who seek with glory to combine honour's untarnished fame,Do no inglorious deeds, though men accord them glory's name
Translation
Who seek honour and manly fame Don't do mean deeds even for name
Explanation
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame
Write Your Comment