அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் | குறள் எண் - 96

allavai-theya-aramperukum-nallavai-naati-iniya-solin-96

52

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

"தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்"

கலைஞர் உரை

"பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்."

மு. வரதராசன் உரை

"பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை ஆராய்ந்தறிந்து இனிமையானவற்றைச் சொல்லுவானானால், அவனுக்குத் தீமைகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும். "

வி முனுசாமி உரை

Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin

Couplet

Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow

Translation

His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow

Explanation

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase

52

Write Your Comment