z

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். | குறள் எண் - 1197

paruvaralum-paidhalum-kaanaankol-kaaman-oruvarkan-nindrozhuku-vaan-1197

132

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

கலைஞர் உரை

"காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!"

மு. வரதராசன் உரை

"( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?"

சாலமன் பாப்பையா உரை

"ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?"

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான். "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இன்பம் நுகர்வதற்குள்ள ஆண்பெண் இரு பாலரிடத்தும், சமமாக நிற்காமல், ஒருவரிடத்தில் மட்டும் நின்று துன்பம் செய்கின்ற காமன் என்னுடைய நோயினையும் மிகுந்த துன்பத்தினையும் அறியமாட்டானோ?. "

Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan

Couplet

While Kaman rushes straight at me alone,Is all my pain and wasting grief unknown

Translation

This cupid aims at me alone; Knows he not my pallor and pain?

Explanation

Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

132

Write Your Comment