கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். | குறள் எண் - 668

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
கலைஞர் உரை
"மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்"
மு. வரதராசன் உரை
"மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்."
சாலமன் பாப்பையா உரை
"மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தௌ¤ந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தௌ¤ந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது. "
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu Thookkang Katindhu Seyal
Couplet
What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil
Translation
Waver not; do wakefully The deed resolved purposefully
Explanation
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay
Write Your Comment