உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. | குறள் எண் - 734

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.
கலைஞர் உரை
"பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்"
மு. வரதராசன் உரை
"மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்."
சாலமன் பாப்பையா உரை
"மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று. "
Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum Seraa Thiyalvadhu Naatu
Couplet
That is a 'land' whose peaceful annals know,Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe
Translation
It is country which is free from Fierce famine, plague and foemen's harm
Explanation
A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes
Write Your Comment