மீன் குழம்பை விட அதிகமாக விரும்பி உண்ணக் கூடியது கருவாட்டுக் குழம்பு – Karuvaatu kolambu.
அதுவும் கருவாட்டு குழம்பை மறு நாள் வைத்திருந்து உண்பது அதன் சுவையை அதிகரிக்கிறது.
நமது கிராமப்புறங்களில் செய்யும் பாரம்பரிய கருவாட்டு குழம்பு முறையை பார்ப்போம்..
தேவையானவை :
- கருவாடு – 200கிராம்,
- கத்தரிக்காய் – 1/4 கிலோ,
- உருளைக்கிழங்கு – 2,
- பச்சை மிளகாய் – 2,
- தக்காளி – 2,
- புளி – தேவையான அளவு,
- கடுகு – 1/2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிது,
- எண்ணெய், உப்பு – தேவியான அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
- சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி அளவு,
- மல்லி தூள் – 50 கிராம்,
- சீரகம் – 1/2 டீஸ்பூன்,
- மிளகு – 1 டீஸ்பூன்.
- வரமிளகாய் – 2,
- கறிவேப்பிலை – சிறிது,
- பூண்டு – 4 பற்கள்,
- துருவிய தேங்காய் – 1/4 கப்
செய்முறை :
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வரமிளகாய் வெங்காயம் பூண்டு சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பொன்னிறமாக வதங்கியவுடன் இதனை ஆற வைத்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளவும்.
கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அது வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகவிடவும்.
பின்பு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் புளிக் கரைசலுடன் கருவாடு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்பொழுது சுவையான கிராமத்துக் கருவாட்டுக் குழம்பு -Karuvaatu kolambu – தயார்.