கோவக்காய் ( Kovakai ) மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மருந்தாகும்.
கோவக்காய் இலை உடல்சூடு,நீர்ச்சுருக்கம், சிரங்கு, ஆறாத புண்கள் ,இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.
கோவக்காய் வாத நோய்கள், குஷ்டம், வேர் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவக்காயை தினமும் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு கணிசமாக குறையும்.
அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு வகையான கோவக்காய் உடலுக்கு பெரும் நன்மைகளை தரக்கூடியதாகும்.
கோவக்காயில் – Kovakai Uses- வைட்டமின் ஏ உள்ளதால் வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு உள்ளவர்கள் இதனை சாம்பார் பொரியல் போன்று சமைத்து உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கோவைக்காயின் இலையை நசுக்கி கிடைக்கும் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணையை சேர்த்து உடல் முழுவதும் பூச வேண்டும்.மேலும் ஒரு கைப்பிடி அளவு கோவக்காய் நிலையை எடுத்து சாறு பிழிந்து அதனை பாதியாக காய்ச்சி அருந்தினால் ஒரு வாரத்தின் இறுதியில் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் வியாதிகள் குணமாகும்.
கோவைக்காயின் கிழங்கை எடுத்து அதிலுள்ள சாறினை பிழிந்து 10 மில்லி அளவு காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும்.