திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 479
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – வலியறிதல்
அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
மு. வரதராசன் உரை : பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை : தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.
கலைஞர் உரை : இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Valiyaridhal ( The Knowledge of Power )
Tanglish :
Alavara�ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola
Illaakith Thondraak Ketum
Couplet :
Who prosperous lives and of enjoyment knows no bound,His seeming wealth, departing, nowhere shall be found
Translation :
Who does not know to live in bounds His life seems rich but thins and ends
Explanation :
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue