திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 203
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – தீவினையச்சம்
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
மு. வரதராசன் உரை : தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை : தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
கலைஞர் உரை : தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Theevinaiyachcham ( Dread of Evil Deeds )
Tanglish :
Arivinul Ellaan Thalaiyenpa Theeya
Seruvaarkkum Seyyaa Vital
Couplet :
Even to those that hate make no return of ill;So shalt thou wisdom’s highest law, ’tis said, fulfil
Translation :
The wisest of the wise are those Who injure not even their foes
Explanation :
So shalt thou wisdom’s highest law, ’tis said, fulfil