திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 430
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – அறிவுடைமை
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
மு. வரதராசன் உரை : அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை : ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
கலைஞர் உரை : அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Arivutaimai ( The Possession of Knowledge )
Tanglish :
Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar
Ennutaiya Renum Ilar
Couplet :
The wise is rich, with ev’ry blessing blest;The fool is poor, of everything possessed
Translation :
Who have wisdom they are all full Whatev’r they own, misfits are nil
Explanation :
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing