திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 503
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – தெரிந்து தெளிதல்
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
மு. வரதராசன் உரை : அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
சாலமன் பாப்பையா உரை : அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.
கலைஞர் உரை : அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Therindhudhelidhal ( Selection and Confidence )
Tanglish :
Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru
Couplet :
Though deeply learned, unflecked by fault, ’tis rare to see,When closely scanned, a man from all unwisdom free
Translation :
Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance
Explanation :
When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance
குறளுக்குப் பரிமேலழகர் மற்றும் வ. உ. சி உரையும் இடுக. அவை இவர்களினும் சிறந்த எளிய உரைகளாம்.