திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 100
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இனியவை கூறல்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
மு. வரதராசன் உரை : இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
சாலமன் பாப்பையா உரை : மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
கலைஞர் உரை : இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Iniyavaikooral ( The Utterance of Pleasant Words )
Tanglish :
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru
Couplet :
When pleasant words are easy, bitter words to use,Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose
Translation :
Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits
Explanation :
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe