Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka Nandrikkan Thangiyaan Thaazhvu | கெடுவாக வையாது உலகம் நடுவாக கெடுவாக வையாது உலகம் நடுவாக | Kural No - 117 | Thirukkural Meaning & Definition in Tamil and English

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. | குறள் எண் – 117

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 117
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – இல்லறவியல்
  • அதிகாரம் – நடுவு நிலைமை

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

மு. வரதராசன் உரை : நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா உரை : நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

கலைஞர் உரை : நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Illaraviyal ( Domestic Virtue )
  • Adikaram : Natuvu Nilaimai ( Impartiality )

Tanglish :

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka

Nandrikkan Thangiyaan Thaazhvu

Couplet :

The man who justly lives, tenacious of the right,In low estate is never low to wise man’s sight

Translation :

The just reduced to poverty Is not held down by equity

Explanation :

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *