திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1086
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – தகை அணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
மு. வரதராசன் உரை : வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
சாலமன் பாப்பையா உரை : அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.
கலைஞர் உரை : புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Thakaiyananguruththal ( The Pre-marital love )
Tanglish :
Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan
Couplet :
If cruel eye-brow’s bow, Unbent, would veil those glances now;The shafts that wound this trembling heart Her eyes no more would dart
Translation :
If cruel brows unbent, would screen Her eyes won’t cause me trembling pain
Explanation :
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows