திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 34
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
மு. வரதராசன் உரை : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
சாலமன் பாப்பையா உரை : மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
கலைஞர் உரை : மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Aran Valiyuruththal ( Assertion of the Strength of Virtue )
Tanglish :
Manaththukkan Maasilan Aadhal Anaiththu
Aran Aakula Neera Pira
Couplet :
Spotless be thou in mind! This only merits virtue’s name;All else, mere pomp of idle sound, no real worth can claim
Translation :
In spotless mind virtue is found And not in show and swelling sound
Explanation :
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show