திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 335
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – நிலையாமை
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
மு. வரதராசன் உரை : நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை : நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
கலைஞர் உரை : வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Nilaiyaamai ( Instability )
Tanglish :
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum
Couplet :
Before the tongue lie powerless, ‘mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death
Translation :
Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes
Explanation :
Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent