திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 419
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – கேள்வி
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
மு. வரதராசன் உரை : நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையா உரை : நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
கலைஞர் உரை : தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kelvi ( Hearing )
Tanglish :
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu
Couplet :
‘Tis hard for mouth to utter gentle, modest word,When ears discourse of lore refined have never heard
Translation :
A modest mouth is hard for those Who care little to counsels wise
Explanation :
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction