திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 323
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – கொல்லாமை
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
மு. வரதராசன் உரை : இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
சாலமன் பாப்பையா உரை : உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
கலைஞர் உரை : அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Kollaamai ( Not killing )
Tanglish :
Ondraaka Nalladhu Kollaamai Matradhan
Pinsaarap Poiyaamai Nandru
Couplet :
Alone, first of goods things, is ‘not to slay’;The second is, no untrue word to say
Translation :
Not to kill is unique good The next, not to utter falsehood
Explanation :
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood