திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 359
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – மெய்யுணர்தல்
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
மு. வரதராசன் உரை : எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
சாலமன் பாப்பையா உரை : எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.
கலைஞர் உரை : துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Meyyunardhal ( Truth-Conciousness )
Tanglish :
Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch
Chaardharaa Saardharu Noi
Couplet :
The true ‘support’ who knows- rejects ‘supports’ he sought before-Sorrow that clings all destroys, shall cling to him no more
Translation :
Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage
Explanation :
He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)
சார்புணர்ந்து = நமக்குள்ள இச்சைகளை/பற்றுகளை உணர்ந்து
சார்பு கெட ஒழுகின் = அவ்விச்சைகளை/பற்றுகளை விடுத்து வாழ்ந்தால்
மற்றழித்துச் = மறுமையழித்து/ மறுபிறவியழித்து
சார்தரா = துன்பம் தராது
சார்தரு நோய் = துன்பம் விளைவிக்கும் நோய் எனப்படும் பிறவி!
இப்பிறவி இருந்தால் தான் மறுபிறவி வாய்க்கும். ஆனால் மீண்டும் பிறப்பது என்பது துன்பம் தரக் கூடிய ஒன்றே. எனவே நம் பற்றுகளை உணர்ந்து, அவற்றை நீக்கி வாழ்ந்தால், மறுபிறவி என்ற நோயைத்தராத ஒன்றாக இப்பிறவியே இருக்கும்!