திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 444
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
மு. வரதராசன் உரை : தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை : அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
கலைஞர் உரை : அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Periyaaraith Thunaikkotal ( Seeking the Aid of Great Men )
Tanglish :
Thammir Periyaar Thamaraa Ozhukudhal
Vanmaiyu Lellaan Thalai
Couplet :
To live with men of greatness that their own excels,As cherished friends, is greatest power that with a monarch dwells
Translation :
To have betters as intimates Power of all powers promotes
Explanation :
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest