திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 63
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – மக்கட்பேறு
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
மு. வரதராசன் உரை : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை : பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
கலைஞர் உரை : தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Pudhalvaraip Perudhal ( The Wealth of Children )
Tanglish :
Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum
Couplet :
‘Man’s children are his fortune,’ say the wise;From each one’s deeds his varied fortunes rise
Translation :
Children are one’s wealth indeed Their wealth is measured by their deed
Explanation :
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf