திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 67
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – மக்கட்பேறு
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
மு. வரதராசன் உரை : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
கலைஞர் உரை : தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Pudhalvaraip Perudhal ( The Wealth of Children )
Tanglish :
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal
Couplet :
Sire greatest boon on son confers, who makes him meet,In councils of the wise to fill the highest seat
Translation :
A father’s duty to his son is To seat him in front of the wise
Explanation :
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned