திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 202
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
மு. வரதராசன் உரை : தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
சாலமன் பாப்பையா உரை : நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
கலைஞர் உரை : தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Theevinaiyachcham ( Dread of Evil Deeds )
Tanglish :
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum
Couplet :
Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe
Translation :
Since evil begets evil dire Fear ye evil more than fire
Explanation :
Because evil produces evil, therefore should evil be feared more than fire