திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 364
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அவா அறுத்தல்
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
மு. வரதராசன் உரை : தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை : மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
கலைஞர் உரை : தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Avaavaruththal ( Curbing of Desire )
Tanglish :
Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum
Couplet :
Desire’s decease as purity men know;That, too, from yearning search for truth will grow
Translation :
To nothing crave is purity That is the fruit of verity
Explanation :
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth