திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 480
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – வலியறிதல்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
மு. வரதராசன் உரை : தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
சாலமன் பாப்பையா உரை : பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
கலைஞர் உரை : தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Valiyaridhal ( The Knowledge of Power )
Tanglish :
Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallaik Ketum
Couplet :
Beneficence that measures not its bound of means,Will swiftly bring to nought the wealth on which it leans
Translation :
Wealth amassed quickly vanishes Sans level if one lavishes
Explanation :
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property