திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 339
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
மு. வரதராசன் உரை : இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை : உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
கலைஞர் உரை : நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Nilaiyaamai ( Instability )
Tanglish :
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu
Couplet :
Death is sinking into slumbers deep;Birth again is waking out of sleep
Translation :
Death is like a slumber deep And birth like waking from that sleep
Explanation :
Death is like sleep; birth is like awaking from it