திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 265
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – தவம்
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
மு. வரதராசன் உரை : விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
சாலமன் பாப்பையா உரை : விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
கலைஞர் உரை : உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Thavam ( Penance )
Tanglish :
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum
Couplet :
That what they wish may, as they wish, be won,By men on earth are works of painful ‘penance’ done
Translation :
What they wish as they wish is won Here hence by men penance is done
Explanation :
Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)