z

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின். | குறள் எண் - 483

aruvinai-yenpa-ulavo-karuviyaan-kaalam-arindhu-seyin-483

114

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.

கலைஞர் உரை

"தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை"

மு. வரதராசன் உரை

"(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ."

சாலமன் பாப்பையா உரை

"செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?"

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின். "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அவற்றை முடித்ததற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ?. "

Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin

Couplet

Can any work be hard in very fact,If men use fitting means in timely act

Translation

What is hard for him who acts With proper means and time and tacts?

Explanation

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

114

Write Your Comment